எனக்கென தனிச்சிந்தனையும், தனிச் சித்தாந்தமும் கொண்ட சுதந்திரமானவன்

Wednesday, 21 March 2012

All is fair in food and lives.


All is fair in love and war என்றார் சேக்ஸ்பியர். அது அவருடைய கொள்கை. அவருடையதை நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கென்று தனி சிந்தனையும் எனக்கென்று தனி சிந்தாந்தமும் இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை All is fair in food and lives.

உணவில்லாமல் ஒருவனால் எத்தனை நாள் அதிகபட்சம் உயிர் வாழ்ந்துவிடமுடியும்?

ஒரு வாரம் முடியுமா?

அவன் நீரைப் பருகினாலும் அது உணவுதான். அது உண்ணக்கூடிய தகுதி இல்லாததானாலும் அவன் வாய் புகுந்துவிட்ட பிறகு அது உணவுதான். ஒருவனுடைய பதவியால், பொருளால் வந்து சேரக்கூடிய பயன்கள் எதுவானாலும், அவனுடைய பதவியால் பொருளால் விளையக்கூடிய பிரதான பயன் அவன் பசி நீக்குதல்தான். அதன் பிறகுதான் குடும்பம், சொந்தம், நண்பர்கள், தேசம், உலக மாந்தர்கள் எல்லாம். இதற்கு விதிவிலக்கான சிலரும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களெல்லாம் சிறுபாண்மை. "என் சான் உடம்புக்கு வயிறே பிரதானம்"

எத்தனை புகழிருந்தாலும், பதவியிருந்தாலும் பொருளிருந்தாலும் இதயம் என்ற ஒன்று துடிப்பதை நிறுத்திவிட்ட பிறகு அதாவது உயிர் பிரிந்துவிட்ட பிறகு அந்தப் பெயராலும், புகழாலும் அவனுக்கு என்ன பெரிய நன்மை வந்துவிடப்போகிறது. அவன் சவத்தை எரிக்க சில சந்தணக் கட்டைகளைத் தவிர்த்து. இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. "புகழெனின் உயிருங் கொடுக்குவர்" என்று பாடியவனும் இந்த மண்ணில் உண்டு. தனக்கு புகழற்ற சுகவாழ்வு ஒரு வாய்ப்பாகவும், இடர்மிகு புகழ்பெற்ற வாழ்வு மற்றொரு வாய்ப்பாகவும் தரப்பட்ட போது ஹெராக்ளிஸ் புகழ்பெற்ற வாழ்வை தேர்ந்தெடுத்து பித்து பிடித்து தன் மனைவியையும் குழந்தைகளையுமே கொலை செய்தான்.

இப்படிப் புகழுக்காக உயிர் வாழ்ந்தவர்கள் கொஞ்சமே என்பதால் தான் அவர்களைச் சான்று காட்டிக்கொண்டிருக்கிறோம். பசித்த வேளையில் சாப்பிட்டு/சாப்பிடமுடியாமல், இதயம் இயங்கிய வரை வாழ்ந்து பின் இறந்த பல்லாயிரம் கோடி மக்களை அறிந்தவனாகச் சொல்கிறேன் All is fair in food and lives. 

4 comments:

  1. You drag me in this post without my prior permission. I'm going to Olympus now. we will fight there in front of Zeus. Be Prepared.

    ReplyDelete
    Replies
    1. ஹெராக்ளிஸ் பொறுமை தேவை, உன்னைப்பற்றி அந்தக் கிழவன் ஹோமர் கூறியதைத்தான் நான் சான்றாகப் பயன்படுத்தி இங்கு எழுதியிருக்கிறேன். நான் ஞானத்தில் பெரியவன், நீயோ வீரத்தில் மட்டுமே பெரியவன்.

      12 செயல்களைச் செய்து நீ புகழ்பெற்றதைப் போலவே என்னால் மேற்கோள் காட்டப்பட்ட புகழையும் நீ பெற்றிருக்கிறாய் என்பதையும் மறந்துவிடாதே.

      இதையும் மீறி என்னிடம் சன்டையிட முயலாதே... நாம் ஒலிம்பஸில் சீயஸின் முன்னால் மகிழ்வோடு சந்திப்போம்.

      Delete
    2. இதனால்தான் நீ ஞானம் பெற்றவன் என அழைக்கப்பெறுகிறாய் நெஸ்டர்.

      Delete
  2. இருவரும் சமாதானமாகச் செல்லுங்கள். நெஸ்டர் கூறியபடி ஒலிம்பஸில் என்னை மகிழ்வோடு சந்தியுங்கள்.

    ReplyDelete

© 2011 நெஸ்டர் - ஞானம் பெற்றவன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena